Monday, December 25, 2017

“ஆங்கோர்ஏழைக்கு எழுத்தறிவித்தல் அன்னசத்திரம் ஆயிரம்கட்டல் ஆலயம்பதினாயிரம் நாட்டல் இன்னுமாயிரம் புண்ணியம்கோடி
தமிழ் மக்கள்மீதாக வலிந்து திணிக்கப்பட்ட கொடூர யுத்தம்  உருவாக்கிய வறுமையில​வாடும் ஏழைஎழிய தமிழ்  மாணவசெல்வங்ளின் கல்வி மேம்பாட்டுக்காக தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தை புனரமைப்போம்!







1957இல் தமிழ் மாணவர்களின்  உயர்கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட  தமிழ் பல்கலைக்கழக இயக்கம்  நிர்வாகிகளின் பொறுப்பற்ற  சுயநல போக்கால் இலக்கு தவறி பயணித்து வங்க​றோத்து நிலையில் மூடுவிழவை எதிர்நோக்கியது. இந்த சந்தர்ப்பத்தில் சமூகப்பற்றுள்ள துடிப்பான இளம் உறுப்பினாகளின் பெருமுயற்சியால் தெரிவுசெய்யப்பட்ட  மூத்த சட்டத்தரணி அமரர் மா.கனகரத்தினம் (மாணிக்ஸ்) தலைமையிலான புதிய நிர்வாகம் த.ப.க.இயக்கத்திற்கு சொந்தமானதும் திருகோணமலை உப்புவெளியில் அமைந்துள்ளதுமான 83 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படாமல் முடஙகிக்கிடந்த கமத்தொழில் கால்நடை செயல்முறை பயிற்சி நிலையத்தை புனரமைத்து இயங்கவைக்கும் பாரிய பணியை சட்டத்தரணி எல்.ஏ.ரி.வில்லியம்சிடம் ஒப்டைத்தது (மேலதிக விபரங்ளை அறிந்துகொள்ள த.ப.க.இயக்கத்தின் வரலாற்று சுருக்கத்தை    வெளிப்படுத்தும் “மறைக்கப்பட்ட உணமைகள்என்ற கைநூலை வாசிக்கவும்) அமரர் மா.கனரெத்தினம் தலமையிலான நிர்வாகிகள் சொந்த வேலைகள் காரணமாக நிர்வாக பதவிகளில் தொடர முடியாத காரணியாலும், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கிலும் புதியவர்ளை தெரிவுசெய்யும்படி பொதுச்சபை உறுப்பினர்ளை கேட்டுக் கொண்டதற்க்கு அமைவாக ஏற்பட்ட நிர்வாக மாற்றம், எஸ்.ஏ.டேவிட்டின்​  அறிவுறுத்தலுக்கு இணங்க செயற்பட்பட்டதனால் உருவான நடைமுறை சிக்கல்களால் த.ப.க.இயக்கத்தின் பயிற்சி நிலைய பணிப்பாளர் பதவியில் இருந்தும் ஏனைய பொறுப்புகளில் இர்ருந்தும் எல்.ஏ.ரி.வில்லியம்ஸ் விலகிக்கொண்டார். அதையடுத்து  புதிய பணிப்பாளராக  பொறுப​பேற்ற  சொலமன் அருளானந்தம் .டேவிற் தலைமையில் ​ இடம்பெற்ற நிகழ்வுகளால் உப்புவெளி பயிற்ச்சி நிலையம். அதலபாதாளத்துக்கு தள்ளப்பட்டது.. இநத  சூழலையும், யுத்தநெருக்கடிளையும பயன்படுத்தி த.ப.க.இயக்கத்தின் ஏழு உஷப்பினர்ளை கொண்ட தர்மகர்த்தாக்க​ள் வரிசையில் கடைசி இடத்தை வகித்தவரான நா.கிறிஷ்ணதாசன் மற்றும் 1989 பொது தேர்தலில் விரல்விட்டு  எண்ணக்கூடிய வாக்குகளைப் பெற்று ஈ.பி.டிபி சார்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற.உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட மு..சந்திரகுமாருடனும் திருகோணலையில்  உயர்பதவிகள் வகித்த சில ஊளல், மோசடி பெருச்சாளிகளும் கூட்டு சேர்ந்து த.ப.க.இயக்த்துக்கு சொந்தமான பல கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியுள்ள அசையும் அசையா( கிட்டத்தட்ட  (86 ஏக்கர் நிலங்கள் உப்புவெளியில் 86ஏக்கர்கள் நகரத்தின் உள்துறைமுகவீதியில் 05ஏக்கருமக                மொத்தம் 91ஏக்கர்கள் அடங்கலாக) சொத்துக்ளை மோசடியாக கையாடலுக்கு  இலக்காக்கியுள்ளனர் தற்போதைய நிலவரப்படி மேல்கூறப்பட்டுள்ள தீயசக்திகள் தமிழர் வரலாற்றில் தமிழ் மக்கள் தங்களிடத்தில் தாமே கொண்டிருந்த நம்பிக்கையை பறைசாற்றும் அடையளச் சின்னமான த.ப.க.இயக்கத்துக்கு  சொந்தமான 96 ஏக்கர் நிலத்தில் மோசடியாக விற்னை செய்த்துடன் நூறுவருட குத்கை என்றபோர்வையில்  அபகரித்ததும்போக எஞ்சியவற்றையும் தமது சொந்த சொத்ததாக மாற்றிக்கொள்ளும் நோக்கில் இந்த   சொத்துகளுக்கு உரித்தான தமிழ் பல்கலைக்கழக இயக்கம்  என்னும் இயற் பெயரையே   நடைமுறையில் இல்லாமல் செய்யும் செயற்பாடுகளிலும் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர முப்பது வருடகால யுத்த்த்தின் கொடுமைக்கு இலக்காகி நிர்க்திக்குள்ளாகியுள்ள தமிழ் சமூகத்தினற்கு உரித்தான பொதுசொத்து  அம்மக்கள் மத்தியில்,  பல்லாயிரக்கணக்கான ஏழைஎளிய மாணவ மாணவிகள் ஆரம்ப கல்வி முதற் கொண்டு பல்கலைக்கழக கல்வி மற்றும்தொழில்நுட்ப உயர்கல்வி வரையில் பொருளாதார  நெருக்கடிகளால் நெருங்கமுடியாமல் தவித்துக் ​கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன்பதாக தமிழ் மாணவர்களின் உயர்கல்வி மேம்பாட்டுக்காக தமிழ் பல்லைக்கழகம் ஒன்றை நிறுவிட  மேற்கொண்ட முயற்சிக்கு, இலஙகைவாழ் தமிழ்மக்கள் ஒன்றணைந்து பெருந்தொகை பணத்தை நன்கொடையாக வாரிஇறைத்தும் திருக்கோணமலையை பூர்வீகமாக கொண்ட தமிழ்மக்கள் தமது சொந்த நிலங்களை திருகோணமலையில் தமிழர்களின் பாரம்பரிய உரிமையை வலியுறுத்தி  தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவிட ஏற்புடையதாக, ஆகக்குறைந்த விலையில் (ஏக்கர் ஒன்று ஆயிரம் ருபா விகிதம்) ஒருவகை தானமாக தியாகம் செய்தும் இருக்கிறார்கள். இந்த ​சொத்துக்கள் தமிழ் மாணவ,மணவிகளின் கல்வி மேம்பாட்டுக்கு பயன்பட வேண்டுமே தவிர  ஊளல்,  மோசடி பேர்வளிகளினதும், முன்னாள் ஆயுதக்குழுக்ளின் தலைவர்களதும் கஜானாக்களை நிரப்புவதற்க்காக ஒட்டுமொத்த  தமிழ் சமூகத்துக்கும் சவால்விடுத்து கையாடல் செய்வதை சுயமரியதையுள்ள எந்த தமிழனும் அனுமதிக்க மாட்டான்.,அனுமதிக்கவும் கூடாது குறிப்பாக த.ப.க.இயக்கத்துக்கு தமது சொந்த நிலங்களை ஒரு வகை தியாகமாக தானம் செய்த பெருந்தகைகளின் வாரிசுகள் இவ்விவகாரத்தில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டு தமது முன்னோர்களின் தியாகத்தை ஏதோ ஒரு வகையில்    சொந்த சமூகந்தை  சேர்ந்த ஏழைஎளிய மாணவர்க்கு பயனளிக்கத்தக்கதாக மாற்றிட முன்வர வேண்டும்.
தற்போதைய ஜனநாயக சூழலில் கடந்தகால யுத்த கொடூரத்துக்குள் வலிந்து தள்ளப்பட்ட தமிழ் சமூகத்தின் மத்தியில் தகுதியிருந்தும் பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வியை நெருங்கமுடியாமல் ஏழ்மையின்பிடியில் சிக்குண்டு எங்கிதவிக்கும் நமது உறவுகளுக்கு த.ப.க   உதவிட புலமைபரிசில் திட்டமொன்றை ஏற்படுத்த வேண்டியது  காலத்தின் கட்டாயமாகும். இதவே த.ப.க.இயக்த்தின் முன்னாள் தலைவர் அமரர் மா.கனகரத்தினம் (மாணிக்ஸ்) அவர்களின் எதிர்பார்ப்பாகும் இந்த உயரிய தேவைக்காக புதிதாக நிதியங்ளை உருவாக்கி உண்டியல் குலுக்க வேண்டிய அவசியமிலை. ஏற்கெனவே  நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கும் த.ப.க.இயக்கத்தின் மூலம்  ஏழைஎளிய தமிழ் மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்கு பயனளிக்கத்தக்கதாக த.ப.க.இயக்கத்தின் தர்மசொத்துக்​களை பயன்படுத்தி நிரந்தர வருமானத்தை  பெற்று மேற்படி தேவையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.  இந்த திட்டமிடலுக்கு செயல்வடிவம் கொடுக்க ஏற்புடையதாகவும் தீயசக்திகளின் கையாடலுக்கு இலக்காகியுள்ள த.ப.க.இயக்கத்தின் அசையும் அசையா  சொத்துக்களை மீட்டெடுத்து அவற்றின் வருமானங்கள் நேரடியாக புலமைபரிசில் நிதியத்தை சென்றடைய ஏற்புடையதான நடவடிக்கைளை மேற்கொள்ள வசதியாகவும் ,த.ப.க.இயக்கத்துக்கு புத்துயிரூட்ட வசதியாக புதிய பொதுச்பை, புதிய தர்மாகர்தாக்கள் சபையை தெரிவுசெய்ய வேண்டியது உடனடி தேவையாக உள்ளது..தப.க..இயக்கத்தை புனரமைத்து  தமிழ் சமூகத்துக்கு பயனுள்ளதாக மாற்றிமைப்பதில் ஆர்வமுள்ளவர்களை பரந்துபட்டரீதியாக ஒன்றுதிரட்டி அங்கத்துவர்கள் சேர்க்கப்பட் வேண்டும்.  புதிய அங்கத்தவர்கள் மத்தியில் இருந்து புதிய நிர்வாகமும், தமிழ் சமூகத்தின் நம்பிக்க்க்கு உரிய ஏழு கனவான்களை தெரிவசெய்யப்பட்டு தர்மகர்த்தாக்கள் சபையும் நியமிக்கப்பட  வேண்டும். பேரழிவுக்குள்ளாகியிருக்கும் தமிழ் சமூகத்தில் நிர்கதிக்குள்ளாகியுள்ள மாணவ சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த பாரியபணியை சவாலாக ஏற்று செயல்பட தமிழ்மக்கள் மத்தியிலான இனப்பற்றாளர்களும், முற்போக்கு சக்திளையும்  பொதுமக்ளையும் ஒன்றணைந்து செயற்பட முன்வருமாறு அழைப்புவிடுக்கும அதேவேளை ​ தாயகம்வாழ் ஏழைஎளிய தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் அக்றையும் அனுதாபமும்கொண்ட புலம்பெயர் உறவுளையும் எம்முடன் கைகோர்த்து செயலாற்ற முன்வருமாறு “த.ப.க.இக்கத்தின் மறுமலர்ச்சிக்கான அமைப்பு”  அறைகூவல் ​விடுக்கின்றது..தொடர்புகளுக்கு
 தொலைபேசி இல – 077- 6195785          12-11-2017
இத்துண்டுபிரசுரம்த.ப.க.இயக்கதின் புனரமைப்பை.வலியுறுத்தும் த.ப.க.இயக்கத்தின் மறுமலர்ச்சிக்கான அமைப்பு சார்பில் கோபாலபுரம், நிலாவெளியை சேர்ந்த பூ.சந்திரகுமாரன் ஆகிய என்னால்வெளியிடப்பட்டது.!                                                       
குறிப்பு – இத்துண்டு பிரசுரம்தொடர்பில் தஙகளது அபிப்பிராயத்தையும், நலைப்பாட்டையும், சநதேகங்ளையும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள கைதொலைபேசி  இலக்கத்துடன் தொட​ர்புகொண்டு தெரிவிக்கவும்.


உங்கள் அபிப்ராயங்ளையும் திருத்தங்கள், ஆலோசனைளையும் எதிர்பார்க்கினறோம்

1 comment:

Unknown said...

https://youtu.be/XOhXLoHtRSQ

Post a Comment

Search This Blog