Sunday, September 26, 2010

திருக்கோணமலை வீரகத்திபிள்ளையார் கோவில் எதிர்கொள்ளும் சவால்கள்! பி.எஸ்.குமாரன



பேரினவாத காடையர்களின் கைவரிசையால் சிதைந்துபோயிருக்கும் வீரகத்தி பிள்ளையார் கோவிலின் உட்புற, வெளிப்புறத்தோற்றங்கள்.

தமிழர்களின் வரலாற்றுசான்றுகள் நிறைந்ததும் தமிழர்தாயகத்தின் தலைநகரம் என ஈழத்தமிழர்களால் கருதப்படுவதுமான திருக்கோணமலை நகரின் நுளைவாயிலான மடத்தடி என அழைக்கப்படும் பகுதியில் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருந்த வீரகத்திப்பிள்ளையார் கோவில் திருக்கோணமலையில் தமிழர்களின் வரலாற்று உரிமையை பறைசாற்றும் 300 வருட பழமைவாய்ந்த வரலாற்றைக்கொண்டதாகும்;;. இந்த கோவிலுக்கு சொந்தமானதும் கோவிலை சூழஉள்ளதுமான நிலப்பரப்புகளை சொந்தஇனத்துரோகிகளின் மறைமுக ஒத்துழைப்போடு பேரினவாதிகளின் ஆக்கிரமிப்புக்கு பறிகொடுத்து அவர்களின் சுற்றிவளைப்புக்குள் சிக்கி சிறைபட்டு சீரழிவுக்குள்ளாகி உள்;ளகாட்சியையே காணமுடிகிற
து இக்கோவிலின் தற்போதைய நிலமையானது திருக்கோணமலையில் தமிழர்களின் பாரம்பரிய உரிமைகள் சொந்தஇனத்துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டுவரும் நிலைமைக்கு உயிரூட்டமுள்ள சாட்சியமாக திகழ்;கிறது.


வரலாற்றுச் சுருக்கம்!
1650ல் திருக்கோணமலை வழித்தோன்றல்களில் ஒருவரான பெரியராசக்கோன் முதலியார், தனக்குசொந்தமானதும் வீரகத்தி பிள்ளையார் கோவில் அமைந்துள்ளதுமான நிலப்பரப்பில் சிறியபிள்ளையார் கோவில் ஒன்றையும் அதற்கருகில் மடம் ஒன்றையும் கட்டினார். இக்கோவிலே பிற்காலத்தில் வீரகத்திபிள்ளையாh.; கோவில் என அழைக்கப்பட்டது பெரியராசக்கோன். முதலியாரின் மறைவை அடுத்துஇ அவரது பரம்பரையினராலேயே இக்கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது பெரியராசக்கோன் முதலியாரின் பரம்பரையினருக்கே இக்கோவில் உரித்தானதாக இருந்துவருகிறது.
1801ல் பெரியராசக்கோன் முதலியாரின் பரம்பரை வழித்தோன்றவல்களாகிய அகிலேசபிள்ளை வேலுப்பிள்ளை என்பவரும் சுவாமிநாதமுதலியாரின் மகனுமாகிய வீரகத்திராசக்கோன் முதலியாருமாகச் சேர்ந்து சிறியதாக இருந்த வீரகத்திப் பிள்ளையார் கோவிலை திருத்தி பெரியளவில் திருப்பணிகளை மேற்க்கொண்டனர். இத்திருப்பணிகளை ஆரம்பிக்குமுன் அகிலேசபிள்ளைஇ வேலுப்பிள்ளை, இராசக்கோன் முதலியார்,இவர்களது குடும்பத்தை சார்ந்த இன்னுமொரு முதலியார்.,கணபதி குருக்கள் ஆகிய நால்வரும் இணைந்து சாசனம் (உடன்படிக்கை) ஒன்றை எழுதிக்கொண்டதாக


பேரினவாத காடையர்களின் கைவரிசையால் சிதைந்துபோயிருக்கும் வீரகத்தி பிள்ளையார் கோவிலின். வெளிப்புற பக்க்;வாட்டான தோற்றம்.


சொல்லப்படுகிறது,இவ்உடன்படிக்கை, இவ் உடன்படிக்கையின் பின்னரே பின்வரும் திருப்பணிகள் செய்யப்பட்;ன .பெரியராசக்கோன் முதலியர்ருடைய தர்மமடம் அமைந்திருந:;த நிலத்தில் வீரகத்தி ராசக்கோன் முதலியார் ஊர்மக்க்கள் வழங்கிய நன்கொடைகளையும:; சேர்த்து கற்பகிரகம்இ அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்தம்பமண்டபம், சுற்றுமதில் உட்புறத்தில் மடப்பள்ளி களஞ்சியம், யாகசாலை, வாகனசாலை, என்பவைகளும் வடக்குவீதியை அண்டியதாக குருக்கள், பிராமணருக்கு அக்கிரகாரம், சங்கமர் குடியிருக்க வீடுகளும், கிணறுகளும் கட்டிமுடித்ததுடன் கோவிலுக்கு தேர், வாகனங்கள், கேடயங்கள் குடை, கொடி, ஆலவட்டம் முதலிய பரிவட்டங்களுடன் பொன், வெள்ளி நகைகளும் சேர்த்து வெகுவிமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது இதையடுத்து கோவிலில் இரண்டுகால பூசைகள் நடைபெற்றுவந்தது..;

இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும் எனப்பேரவாகொண்ட திருக்கோணமலை ப+ர்வீககுடிமக்கள் கோவிலை சூழவும் அதனை அண்மித்ததுமான பகுதிகளிலும், திருக்கோணமலை நகர்புறத்திலும் பெருமளவிலான நிலங்களையும்; தம்பலகாமம் பகுதியில் கணிசமானஅளவு வயல்நிலங்களையும் கோவிலுக்கு தேவையான வருவாய்யை பெற்றுக்கொள்ள ஏற்புடையதான அசையாசொத்தாக வழங்கியிருந்தனர். இவ்விதமாக கோவிலுக்கு நம்பிக்கைசொத்தாக வழங்கப்பட்ட நிலபுலன்கள் இன்று சொந்தஇனத் துரோகிகளின் ஒத்தாசையுடன அடாத்தான் ஆக்கிரமிப்புக்கு இலக்காகி உள்ளது

1878ல் வேலுப்பிள்ளை இறைபதம் அடைந்ததை அடுத்து அவரதுமகன் அகிலேசபிள்ளையும், 1910ல் அவரது மறைவுக்குப்பின் அவரது மூத்தமகன் அ,இராசக்கோனும், மயில்வாகன முதலியார் சுப்ரமணியம் என்பவரும் வீரகத்திபிள்ளையார் கோவிலை பரிபாலித்துவந்தனர். அ . இராசக்கோன் அரசாங்கஉத்தியோகத்தில் இருந்தமையினால் அவருடைய சகோதரன் அ. அழகக்கோன் என்பவரும் ம. சுப்ரமணியம் என்பவரும் ஆலயத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்று ஆலயத்தை பரிபாலித்துவந்தனர் இவர்களின் பரிபாலனத்தின்போது 1942 மாசிமாதம் 6ம் திகதி இக்கோவிலில் நவக்கிரகங்களை பிரதிஷ்டைசெய்து கும்பாபிஷேகத்தை நடாத்திவைத்தனர், இகோவிலுக்கு நான்கு கும்பாபிஷேகங்கள். நுடாத்தப்பட்டதாகவும் ஒவ்வொரு கும்பாபிஷேகத்தின்போதும் ஆலயதிருப்பணிவேலைகளும் நடைபெற்றுள்ளன. இவ்வாறாக திருக்கோணமலை தமிழர்களின் வரலாற்று உரிமையை பறைசாற்றிநின்ற வீரகத்திபிள்ளையார் கோவிலின் இன்றைய நிலைமையானது. திருக்கோணமலையை பாரம்பரியமாக கொண்ட தமிழர்களின் இருப்பு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கான சாட்சியமாகும்


சீரழிவின்பின்னணி

2வது உலகயுத்தத்த காலத்தின்போது திருக்கோணமலையில் ஏற்பட்ட நிலைமைகள் காரணமாக கோவில் செயல்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்தது, இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருக்கோணமலை பிரமுகர்கள் வரிசையில் ஒருவராககருதப்பட்டவரும் நீதித்துறையில் முக்கியபதவி வகித்தவருமான கிறிஷ்ணதசன் என்பவர் வீரகத்தி பிள்ளையார் கோவிலை அடாத்தாக கைப்பற்றி அதன் சொத்துக்கள் மீதாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். கிறிஷ்ணதாசனின் ஆதிக்கத்தின் பின்னரே வீரகத்தி பிள்ளையார் கோவிலின் நிலபுலன்கள் பேரினவாதிகளின் அத்துமீறிய குடியேற்றங்களுக்கு பலியாகின குறிப்பாக கோவில் வெளிவீதிக்கும் பிரதான வீதிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் சிங்கள முதலாளிகள் அத்துமீறி கடைகளை அமைத்துக்கொண்டனர். கோவில் நிலங்களில் அத்துமீறி குடியேறிய பேரினவாதிகளிடம் கணிசமான பணத்தை பெற்றுக்கொண்ட கிறிஷ்ணதாசன நிலங்களை காலவரையற்ற குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பேரினவாதிகளின் அத்துமீறிய குடியேற்றங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

கிறிஷ்ணதாசனின் பிடியிலிருந்து கோவிலை மீட்டெடுக்க வேண்டிய கடைப்பாடுடையவர்களும், கோவிலின் சட்டரீதியான தர்மகர்த்தாக்களுமான பெரிய ராசக்கோன் முதலியார் பரம்பரையின் வழித்தேன்றலுமான அகிலேசபிள்ளை மாவட்ட நீதி மன்றில் கிறிஷ்ணதாசனுக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல்செய்தார். இவ்வளக்கு கிட் டத்தட்ட 16 வருடங்கள் நடைபெற்றதன் பின்னர் கிறிஷ்ணதாசனுக்;கு எதிராக தீர்ப்பு வளங்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து கிறிஷ்ணதாசன் அப்பீல் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களுக்கு அப்பீல்செய்தபோதும் அந்நீதிமன்ற ங்களிலும் கிறிஷ்ணதாசனுக்கு தோல்வியே கிடைத்தது அப்பீல்நீதிமன்றங்களில் 4வருடங்கள் விரயமாகின. இவ்வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அகிலேசபிள்ளை இறைபதம் அடைந்ததை தொடர்ந்து அவரது மகனான கணேசலிங்கம் தந்தையின் பொறுப்புகளை கையேற்றுக்கொண்டார்.

நீதிமன்ற உத்தரவுக்கிணங்க வீரகத்திபிள்ளையார் கோவில் பெறுப்புகளை ஏற்றுக்கொண்ட கணேசலிங்கத்திற்கும் கோவில் நிலங்களில்அத்துமீறிய குடியேற்றவாசிகளுக்குமிடையில் முறுகல்நிலை தோற்றம்பெற்றது. இந்நிலமையின் பின்னணியில் கிறிஷ்ணதாசனு;ம் அவரது நம்பிக்கைக்குரிய கையாட்களான தவசலிங்கம், சிவபாதசுந்தரம் ஆகியோர் செயல்பட்டதாக மடத்தடி வட்டாரங்களில் பேசப்பட்டது. பெருமளவான கோவில் நிலங்கள் சட்டவிரேதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதோடு அவற்றிற்கு சட்டவிரோதமாக உறுதிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன இங்கு கவலைக்குரிய விடயம் என்னவெனில், சட்டவிரோத உறுதி களை தயாரித்தவர்கள் திருக்கோணமலையை சேர்ந்த தமிழர்களான சட்டத்தரணிகளாகும் கோவில் நிர்வாகத்தின் சட்டரீதியான அங்கீகாரமற்ற அத்துமீPறிய குடியேற்றவாசிகளுக்கு திருகோணமலை நகரசபை சட்டரீதியான அனைத்து வசதிகளையும் வழங்கியிருப்பதன் மூலம் சட்டரீதியான குடியிருப்பாளர்களாக அத்துமீறிய குடியேற்றவாசிகள ; ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

1983ல் நாடுதழுவியரீதியில் தமிழ் மக்கள் மீதாக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை இனஒழிப்பு கலவரத்தின்போது திருக்கோணமலை மாவட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்து கோவில்களில் வீரகத்தி பிள்ளையார் கோவில் முதன்மையானதாகும்.. அன்றிலிருந்து இடிபாடுகளுடன் காணப்பட்;ட கோவில் 1987ல் கைச்சாத்தான இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு அமைவான இந்தியராணுவ த்தினரின் வருகையை அடுத்து உருவான புதியநிலைமைகளின் கீழ் வீரகத்திபிள்ளையார் கோவில் எதி;ர்கொண்ட பேரினவாத நெருக்கடிகளிலிருந்து விடுதலை கிடைத்ததனால் கோவில் சிறு சிறு திருத்த வேலைகளுடன் நித்திய பூசைகள் ஆரம்பமாகின. 1990ல் இந்திய ராணுவம் வெளியேறியதை தொடர்ந்து திருக்கோணமலையில் இடம்பெற்ற அரசஆ தரவுடனான பேரினவாதிகளின் வெறியாட்;டத்திற்கு பலியான இந்துகோவில்களில் மிகமோசமாக பாதிக்கப்பட்டது வீரகத்திபிள்ளையார் கோவிலேயாகும். அதேபோல் கோவில் பரிபாலகர் கணேசலிங்கத்துக்கு பேரினவாதிகளின் அச்சுறுத்தல்களும் அதிகரித்தன .மறுபுறமாக கோவிலை கைப்பற்றும் முயற்சியில் கிறிஷ்ணதாசனின் வழிகாட்டலில் தவசலிங்கம், சிவபாதசுந்தரம் கும்பல் ஈடுபடத்தொடங்கியது இதற்காக இவர்கள் கணேசலிங்கத்தை அச்சுறுத்தும் விதத்திலான நடவடிக்கைகளிவல் ஈடுபட்டனர் இந்தவிடயத்தில் மிகதந்திரமாக செயல்படுவதில் கைதேர்ந்தவரான தவசலிங்கம் ஆயுதம் தாங்கிய தமிழ் ஜனநாயக அரசியல்கட்சிகளான ரெலோ, புளட், ஈ, பி , டி ,பி போன்ற கட்சிகளின் ஆதரவை நாடியபோதும் வீரகத்திபிள்ளையார் கோவில் விடயத்தில் தவசலிங்கத்தின் தந்திரோபாயம். தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் கணேசலிங்கம் பரம்பரைக்கு சொந்தமான சுpவன் கோவிலை சிவன்கோவிலடி சண்டியன்களின் ஓத்தாசையுடன் கைப்பற்றுவதில் தற்காலிக வெற்றிகண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவசலிங்கம் சிவன்கேவிலை கைக்கற்றியதன் பின்னணியில் சிவன்கோவில் நிலங்களை அபகரிக்கும் சதித்திட்டம் இருப்பதாக விசயம்அறிந்த வட்டாரங்களில் பேசப்படுகிறது. ,

வீரகத்திபிள்ளையார் கோவில் தொடர்பாக் பேரினவாத காடையர்களின் காடைத்தனத்தின் பின்னணியில் கிறிஷ்ணதாசன், தவசலிங்கம், சிவபாதசுந்தரம் கும்பல்க ளின் ஊக்குவிப்புக்கு மேற்கூறப்பட்டுள்ள விடயங்கள் போதுமான சாட்சியமாகும். பாரியசே தங்களுக்குள்ளாகியிருக்கும் 300 வருடகால வரலாற்றையுடைய வீரகத்திபிள்ளையார் கோ வில் புதிதாககட்டியெழுப்ப வேண்டிய நிலமைக்குள்ளாகியுள்ளது. இத்தகைய துர்ப்பாக்கிய நிலமை வீரகத்திபிள்ளையாருக்கு ஏற்பட்டமைக்கான பொறுப்பை கிறிஷ் ணதாசன், தவசலிங்கம், சிவபாதசுந்தரம் கும்பல் பொறுப்பேற்க்கவேண்டும் என்பதே திருக்கோணமலை மக்களின் கருத்தாகும்;.


கோவிலின் வசந்த மண்டபத்தில் வீரகத்திபிள்ளையார் பாலஸ்தானம் செய்யப்பட்டிருக்கும் புதிதாக கட்டப்பட்ட சிறிய அறையையும் அறையின் பின்புறத்தில் காடையர்கள் மலசலம் கழித்திருக்கும்;; காட்சியையே படத்தில் காண்கிறீர்கள் இப்படம் 18 – 08 – 2010 திகதி பிடிக்கப்பட்டது

தற்போதைய நிலவரப்படி பரிபாலகர் கணேசலிங்கம் இடிபாடுகளுடன் காணப்படும் கோவிலின் வசந்;தமண்டபத்தில் சிறியஅளவில் அறையொன்றை கட்டி அதில் வீரகத்திபிள் ளையாரை பாலஸ்தானம் செய்து பூசைநாடாத்தி வருகிறார் அதேவேளை அந்தஅறைக்கு பின்புறமாக மலசலம்கழித்து கோவிலின் புனிதத்;தன்மைக்கு பங்கம்விளைவித்து வருகின்றனர்.சிங்கள பேரினவாதிகள் எந்த ஒரு இனத்தினதும் வரலாற்றுரீதியான வாழ்வுரிமையை மறுதலிப்பதானால் அந்த இனத்திற்குரியதானதும் வரலாற்றுரீதியான அடையாளங்களான கல்வி, கலை, கலாச்சார, பண்பாட்டு ஸ்தாபனங்களையும், வணக்கஸ்தலங்களையும் நிர்மூலம் செய்வதன் மூலம் அதனை சாத்தியமாக்கிக்கொள்ள முடியும். தற்போது திருக்கோணமலையில் பேரினவதம் செயற்படுத்திவருவதும் தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று அடையாளங்களை அழித்தொழிப்பதேயாகும். இந்த நீண்டவரிசையில் வீரகத்திபிள்ளையார் கோவில் மேலுமொரு சாட்சியமாகும். 1983 ஜுலை இனக்கலவரத்தை அடுத்து கோவில் பரிபாலகர் கணேசலிங்கம் வீரகத்திபிள்ளையார் கோவில் எதிர்கொண்டுவரும் நெருகக்கடிகள் தொடர்பாக திருக்கோணமலை நகராட்சி மன்றம் முதல் நாட்டில் பதவிவகித்த ஜனாதிபதிகள்வரை குறிப்பாக இந்துகலாச்சார அமைச்சர்களுக்கும் பலதடவைகள் முறையீடுகள் செய்தும் எதுவிதமான பலனும் இதுவரை கிடைக்கவிலலை. கோவில் நிலங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் .கு;தகை வழங்காமை. சட்டவிரோத உறுதிகள் தயாரிப்பு போன்றவற்றுக்கெதிராக கோவில் சார்பாக தெடரப்பட்ட வழக்குகளில் கோவிலுக்கு சார்பாக தீர்ப்புகள் வழங்கப்பட்ட போதும் அவைஎவையுமே நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை. ஆகமொத்தத்தில் இத்தகைய ;நிலமைகளானது ஈழத்தமிழர்கள் எதிர்காலத்தில் முகம்கொடுக்க வேண்டீய பாரியசவால்களாகவே கருதவேண்டும்.

Thursday, September 2, 2010

நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை

நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை பி.எஸ்.குமாரன்

தற்போது கொழும்பு அரசியலில் சூடூகிளப்பிக் கொண்டிருப்பது மஹிந்தர் அரசு முன்வைத்திருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பானதாகும். பிரதான எதிர்கட்சியான யு என் பி அரசியல் அமைப்பு சீர்திருத்ததிற்கு தனது பூரணமான எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடாத்தும்படி அரசுக்கு சவால்விடுத்துளளது. அடுத்ததாக தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கும் ஜே.வி.பி அரசியலில் மீண்டெழுவதற்கான வாய்பை உருவாக்கி கொள்ளும் நோக்கில் அரசியலமைப்பு சீர்திருத்த விவகாரத்தை அரசுக்கெதிராக பலமான ஆயுதமாக பயன்படுத்தும் முயற்களில் இறங்கியுள்ளது. ஆதறகாக ஜே.வி.பி மிகமோசமான வழிவகைககளை கையாளவும் தொடங்கியுள்ளது குறிப்பாக சிறுபான்மை கட்சிகள் இவ்விடயத்தில் எத்தகைய முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஜே.வி.பி உத்தரவிடும் பாணியிலான செயல்பாடுகள் மூலம் இனவாதத்தை தூண்டிவிடும் விதத்தில் செயற்பட்டு வருகிறது உதாரணமாக அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்த யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினாகளான பிரபாகணேசன் திகாம்பரம் ஆகியோரை அவமானத்துக்குள்ளாக்கும் வகையில் அச்சு,மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர், இதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மு.கா.தலைவர் ரவூப்ஹக்கீம் தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் விபரங்களை மூ.கா உயர்மட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களுடன் கலந்துரையாடியதையடுத்து அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு சீர்திருத்த யோசனைகளுக்கு ஆதரவளிப்பதெனவும் இந்த ஆதரவை மூ.கா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக அர்த்தப்படுத்த முடியாததெனவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே இம் முடிவானது மு.கா உயர்மட்ட குழுவின் முடிவாகும். இவ்வாறான முடிவொன்றை மேற்க்கொண்டமைக்காக மு.கா.தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீமை ஜே.வி.பி தலைவர் சோமலன்ச அமரசிங்க தூரோகி என அடையாளப்படுத்தி அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் கருத்து வெளியிட்டார். இத்துரோகிப் பிரகடனமானது மு.கா.கட்சியின் சுயாதீனமாக முடிவெடுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் அக்கட்சியின் இறைமைக்கும் விடுக்கப்பட்ட பேரினவாத அச்சுறுத்தலின் வெளிப்பாடாகவே கருதவேண்டும் இது மட்டுமல்லாமல் மூ.கா.பாராளுமன்ற உறுப்பினர்களை கேவலப்படுத்தும்வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர் இவற்றை அடுத்து யூ.என்.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறுபான்மை கட்சிகளை இணைத்துக் கொள்வதற்குப் பதிலாக சிறுபான்மையினத்தை சேர்த்தவர்களை பெரும் கட்சிகள் தமது வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெறும் செயற்படுகளை முன்னெடுக்க வேண்டும் என யோசனை தெரிவிக்கிறார் இந்த யோசனையின் அடிப்படை கருத்தானது சிறுபான்மையின் மக்களை தமது தேவைகளுக்கேற்பயன்படுத்த வேண்டுமே தவிர அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப செயல்படகூடிய வாய்ப்புக்களை தவிர்க்க வேண்டும் என்பதாகும். ஆக எதை எடுத்தாலும் சிறுபான்மை இனங்களை மீதாக மேலாதிக்க கொள்கைகளையே பெரும்பான்மை கட்சிகள் பின்பற்றி வருகின்றனர் என்பது வெளிப்படையானது.
இவை ஒரு பக்கமாக இருக்க அடுத்த பக்கத்தை எடுத்துக்கொண்டதால் சுதந்திர இலங்கையின் எந்த வொரு அரசியலமைப்பு சட்டங்களும் சிறுபான்மை இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் சுயாதிக்கத்தையும் அங்கிகரிப்பதாக இல்லை எனவே எந்தவொரு யாப்பு சீர்திருத்தங்கள் தொடர்பிலும் சிறுபான்மையினங்கள் அக்கறை கொள்வதில் அர்த்தமில்லை இந்த யாப்பு மாற்றங்களால் அவர்களுக்கு புதிதாக எந்தபாதிப்புக்களும் வரப்போவதில்லை, 1948 சோல்பரி அரசியல் யாப்பில் இருந்தே இந்நிலைமை காணப்படுகின்றது 1948 சோல்பரி அரசியல் யாப்பின் 29 ம் பிரிவு பின்வருமாறு கூறியிருந்தது.
அ) எந்தவொரு மதத்தினரும் சுதந்நிரமானது செயல்பாட்டை தடைசெய்யும் அல்லது கட்டுப்படுத்தும் சட்டமூலங்கள்.

ஆ) எந்தவொரு சமூகத்தையோ மதத்தையோ சார்ந்தோர் மீதாக சுமத்த்படாத பொறுப்புக்களையோ கட்டுப்பாடுகளையோ இன்னொரு சமூகத்தையோ மதத்தையோ சார்ந்தவர்கள் மீதாக சுமத்தும் சட்டமூலங்கள்.


இ) ஒரு சமூகத்தையோ மதத்தையோ சார்ந்தவர்களுக்கு வளங்கப்படுகின்ற சிறப்புரிமைகளும், சலுகைகளும் ஏனைய சமூகத்தையே, மதத்தையோ சேர்ந்தவர்களுக்கு வழங்க மறுக்கும் சட்ட மூலங்கள்.

ஈ) எந்தவொரு மதநிறுவனத்தினதும் யாப்பை அந்த நிறுவனத்தின் நிர்வாக சபையின் சம்மதமின்றி மாற்ற முனையும் சட்ட மூலங்கள் ஆகியவற்றை சட்டமூலமாக நிறைவேற்ற முடியாதெனவும் அரசியல் யாப்பில் கூறப்பட்டிருந்தது.

சிறுபான்மை இனங்களுக்கு பாதுகாப்பானது எனக்கூறப்பட்ட சோல்பரியாப்பின் 29 ம் பிரிவு 1948 ல் அதிகாரத்தில் இருந்த டி.எஸ் சேனநாயக்க தலைமையிலான தமிழர் விரோத யூ.என்.பி அரசினால் மலையகத் தமிழர்களை வாக்குரிமை பறிப்பில் இருந்து மீறப்பட தொடங்கியது இதனையடுத்து 1949 மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டதுடன் சோல்பரி அரசியல் யாப்பின் 29ம் பிரிவு இரண்டாவது தடவையும் மீறப்பட்டது.

1954ல் பேரினவாத யூ.என்.பி யின் அன்றையதலைவர்களில் ஒருவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கொழும்பு களனியில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் தாம் பதவிக்கு வந்தால் பௌத்தம் அரச மதம் சிங்களம் அரச கரும மொழி ஆகிய இரண்டு விடயங்களையும் சட்டமாக்குவதாக பகிரங்க பிரகடனம் செய்தார் இதன் மூலம் ஒட்டு மொத்த சிறுபான்மை இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு வேட்டு வைக்கப்பட்டது. ஜே.ஆரின் பிரகடனமே 1956 ல் பிரதமரான பண்டாரநாயக்காவை சிங்களம் அரச கருமமொழி சட்ட அமுலாக்கலுக்கு தூண்டுகோலாக இருந்தது. இந்த சட்டமூலமானது அன்று அரச சேவையில் இருந்த தமிழ் ஊழியர்களை கட்டாயம் சிங்கள மொழியை கற்றே ஆகவேண்டுமென நிர்ப்பந்தித்தது. இதன் காரணமாக கணிசமான தமிழ் அரச ஊழியர்கள் தாம் வகித்த பதவிகளில் இருந்து ஓய்வு பெறவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினர். சுpங்கள மொழியை கற்க தவறியவர்களும் மறுத்தவர்களும் தமது தொழிலை இளந்தனர்.இந்த நிலைமையில் அநீதியான இந்த சட்ட மூலத்தை எதிர்த்து அன்று அரச சேவையில் கடமையாற்றிய திரு. கோடீஸ்வரன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடர்ந்தார். இவ்வழக்கின் தீர்ப்பு திரு. கோடீஸ்வரனுக்கு சாதகமாக இருந்தது. அன்றைய அரசு மாவட்ட நீதிமன்ற தீர்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றம் சென்றது. ஆப்பீல் நீதிமன்றத்தில் மொழிச்சட்ட விவகாரத்தை திசைதிருப்பி அரச ஊளியர் ஒருவர் அரசுக்கு எதிராக வழக்கு தொடர முடியாதென வாதிட்டு தமக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக் கொண்டது. இத் தீர்ப்பை எதிர்த்து அன்றைய உயர் அப்பீல் நீதிமன்றமான லண்டன் பிரிவிக் கவுன்சிலுக்கு அப்பீல் செய்தார். பிரிவிக்கவுன்சில் கோடீஸ்வரன் தரப்பு வாதத்தை ஏற்று கோடீஸ்வரனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் இலங்கை அரசாற்கம் பிரிவிக்கவுன்சிலின் தீர்ப்பை நடைமுறைபடுத்த வில்லை. ஆக சிறுபான்மை இனங்களுக்கு சாதகமான நீதிமன்ற தீர்புகள் கூட இலங்கையில் செல்லாக்காசாகும். அன்றில் இருந்து இன்று வரையில்1972, 1978 களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியல் யாப்புகளும் சிறுபான்மை இனங்களை புறக்கனித்தே தயாரிக்கப்பட்டிருந்தன இவற்றில் இருந்து சிறுபான்மை இனங்கள் கற்றுக்கொண்ட பாடம்தான் சிறுபான்மை மக்களின் உரிமைகளை அங்கிகரிக்ககூடிய அரசியல்யாப்பு சீர்திருத்தங்களை எதிர்பார்ப்பது கல்லில் நார் உரிப்பதற்கு சமமானதென்பதாகும்.
1987ல் யு.என்.பி அரசாசாங்கம் அறிமுகப்படுத§ய புதிய அரசியல்யாப்பில் 12 தடவைகள் திருத்தல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் இத்திருத்தங்கள் எவற்றிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணக்கூடிய எந்தவிதமான சரத்துக்களும் சேர்துக் கொள்ளபடவில்லை இந்த நிலையில் இலங்கை தேசியபிரச்சினை விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்ட இந்திய அரசாங்கம் யு.என்.பி அரசாங்கத்துடன் செய்து கொண்ட இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு அமைவாக தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரபகிர்வை ©ர்வாக்கியது. இதற்கிணங்கவே வரலாற்றில் முதல்தடவையாக தேசிய இனப்பிரச்சினைக்கு ©ர்வாக அதிகாரபரவாக்கலை மையமாகக் கொண்டு அரசியலமைப்பு சட்டத்தில் 13வது திருத்த சட்டமுலம் ஜே வி பி போன்ற பேரினவாதக் கும்பல்களின் பாரிய எதிர்புககு மத்தியிலும் சேர்ததுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் 13வது திருத்த சட்டமூலத்துககு அமைவாக மாகணசபை முறமை அமுல் செய்யப்பட்தே தவிர.13 வது திருத்த சட்டமுலத்தின் மூலம் மாகணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் பிரதானமான காணி,பொலிஸ் அதிகாரங்கள் உட்பட ஏனைய எந்த ஒரு அதிகாரங்களும் உரியமுறையில் இன்றுவரை வழங்கப்படவில்லை. அதாவது சிறுபான்மை இனங்ளுக்கு அரசியல் யாப்பு ரீதியாக வழங்கப்படும் அற்ப சொற்ப உரிமைகள் கூட நடைமுறையில் அமுல்செய்யப்படுவதில்லை எனவே தற்போதைய அரசாங்கம் முனவைத்திருக்கும் அரசியல்யாப்பு சிர்திருத்தங்களால் சிறுபான்மை இனங்கள் எதையும் புதிதாக இளப்பதற்கில்லை. சிறுபான்மை மக்களை பொறுத்தவரையில் ஏற்கனவே தமது ஜனநாயாக மற்றும் ஏனைய அடிப்படை உரிமைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள் என்பதே யதார்ததம் எனவே யார் ஜனாதிபதியாக வந்தால் என்ன அவர் எத்தனை தடவைகள் பதவி வகித்தால்தான் என்ன? சிறு பான்மை இனங்கள் உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்வது சுலபமான காரியமில்லை. எனவே எமக்கு சம்மதமில்லாத விடயங்களுக்காக நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் யுத்தம் முடிவடைந்த 2009 மே 19ம் திகதிக்கு பின்னர் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பரவலர்க்கல் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்க மஹிந்தர் அரசு முன்வருமானால் ஐந்து லடசம் மக்களை கொழும்புக்கு அழைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி அரசாங்கத்தை வீடடுக்கு அனுப்புவோம் என சூழுரைத்த ஜே.வி.பி தலைவர் சோமவனச அமரசிங்க தற்போது அரசாங்கம் முன்வைத்திருக்கும் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களை தோற்கடிக்க சிறுபான்மை இனங்களின் ஓத்துழைப்பை பலவந்தமாகக் கோருவது சிறுபான்மை இனங்கள் மீதான பேரினவாத மேலாதிக்கத்தின் வெளிப்பாடு என்பதில் ஜயமில்லை.

Search This Blog