Sunday, February 19, 2017

  வடக்கில் இடதுசாரி இயக்கத்தின் ஆரம்பம்!
ஏ.எம்.சி.இக்பால்
பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கை இருந்தபோது, 1927ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்திற்கு அமைவாக நாட்டில் 21வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை உண்டு என பிரகடனப்படுத்தப்பட்டு முதலாவது சட்டசபை தேர்தலை பிரித்தானிய அரசு இலங்கையில் நடத்தியது. இலஙகைக்கு முழு சுதந்திரம் வேண்டும் எனக் கூறி சிங்கள, தமிழ் தலைவர்கள் அத்தேர்தலை பகிஷ்கரிப்பது என முடிவு செய்தார்கள்.
தேர்தலின்போது சிங்கள தலைவர்கள் பகிஷ்கரிப்பில் கலந்துகொள்ளாமல் தேர்தலில் பங்குபற்றி சட்டசபைக்கான அங்கத்தவர்களை தேர்ந்தெடுத்தனர். ஆனால் தமிழ் தலைவர்களோ சிங்கள தலைவர்களுடன் கூட்டாக எடுத்த முடிவிற்கமைவாக வடக்கில் தேர்தலை பகிஷ்கரித்தார்கள். இதனால் சட்டசபையில் தமிழர்களுக்கென ஒதுக்கப்பட்ட நான்கு ஆசனங்ளையும் இழந்தார்கள். இந்த நடவடிக்கையானது தமிழர்களின் முற்போக்கு நடவடிக்கை என அன்று கருதப்பட்டது.
இரண்டாவது சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது இங்கிலாந்தில் பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்று இலங்கை திரும்பியிருந்த  எஸ்.ஏ.விக்ரமசிங்க, கொல்வின்.ஆர்.டி.சில்வா, என்.எம்.பெரேரா, பிலிப் குணவர்த்தனா, ரொபேர்ட் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா போன்ற முற்​போக்காளர்கள் இரண்டாவது சட்டபை தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களில் என்.எம்பெரேராவும், பிலிப் குணவர்த்தனவும் வெற்றி பெற்றனர்.
1935ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குறிப்பிடப்பட்ட அனைவருடன் மேலும் சிலரும் இணைந்து லங்கா சமசமாஐக் கட்சியை ஆரம்பித்தனர். அதனது அரசியல் தாக்கம் வடபகுதியையும் தாக்கியது. இவ்விடயத்தில் குறிப்பிடத்தக்கவர் பருத்தித்துறையை சேர்ந்த எஸ்.தர்மகுலசிங்கமாகும். இவர் ஒரு சட்டத்தரணி எனவே இவர் துணிச்சலுடன் இன்னும் சிலரையும் சேர்த்து வடமராட்சியில் லஸ்கா சமசமாஐக் கட்சியை நிறுவினார். அக்கட்சியின் தலைமையில் பஸ் தொழிலாளர் சங்கம், சுருட்டுத் தொழிலாளர் சங்கம், சாதி அடக்குமுறைளை எதிர்க்கும் சங்கம் போன்ற சங்கங்களை நிறுவி அந்த மக்களுக்காக வாதாடி சில வெற்றிகளை வென்றெடுத்துக் கொடுத்துவந்தார்.
இதனால் சமசமாஐக் கட்சியின் செல்வாக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவத்தொடங்கியது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, கரவெட்டி, யாழ்ப்பாணம், சுன்னாகம் போன்ற இடங்களில் லங்கா சமசமாஐக் கட்சியின் நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்தது. இவ்வாறு வளர்ச்சி பெற்று வருகின்றபோது 1939ஆம் ஆண்டு இரண்டாவது உலகயுத்தம் ஆரம்பமாகும் உச்சக்கட்டம், அந்த நேரம் சோவியத் ரஷ்யா தன்னை நாஜிஹிட்லரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக போலந்தின் ஒரு பகுதியை தரும்படிம், அதற்கு பதிலாக ரஷ்யாவின் பகுதியில் மூன்று மடங்கு தருவதாகவும் யுத்தம் முடிய நிலத்தை மாற்றிக்கொள்வோம் எனக போலந்திடம் கேட்டது.​சோவியத் ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த போலந்து அரசு ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்து சரணடைந்த்து. எனவே சோவியத் ரஷ்யா தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக தான் கேட்டபகுதயை கைப்பற்றியது. மேற்படி நிகழ்ச்சி ஐரோப்பாவில் ஏற்பட லங்கா சமசமாஜக்கட்சிக்குள் பெரிய வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டது. சோவியத் ரஷ்யா செய்தது சரியென்றும் ஸ்டாலின் செய்த்து பிழைஎன்றும் விவாதம் நடந்த்து. விவாத முடிவில் எஸ.ஏ.விக்ரமசிங்க, பீற்றர்கெனமன், எம்.ஜி.மென்டிஸ், ஆரியவன்ஸ குணசேகர, டபிள்யூ.ஆரியரட்ன, சரணங்கர தேரர், போன்றோர் லங்கா சமசமாஐக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். என்,எம்​பெரேரா, பிலிப்குணவர்த்தனா, ரெராபேர்ட் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா கொல்வின்.ஆர்.டி.சில்வா, போன்றோர் ஸ்டாலின் ஆக்கிரமிப்பாளனும் ரஷ்ய ஏகாதிபத்திய சர்வாதிகாரி என்றும் ரொக்ஸிதான் மாக்ஙிய லெனியவாதியென்றும் கூறி ரொக்ஸியை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டனர். அன்றில் இருந்து இன்றுவரை முதலாளித்துவத்தை பாதுகாக்கும் பாதுகாவலர்களாகவே ரொக்ஸிஸ்டுகள் செயல்லடுகிறார்கள். இலங்கையில் மட்டுமல்ல உலகம்பூராவும் அவர்களது செயல்பாடுகள் அவ்வாறே நடைபெறுகிறது.
வெளியேற்றப்பட்ட எஸ்.ஏ.விக்ரமசிங்க, பீட்டர் கெனமன், எம்ஜி.மெனடீஸ், ஆரியவன்ஸ குணசேகராவும் ஏனைய வெளியேற்றப்பட்டவர்களும் இன்னும் பலரும் சேர்ந்து 1940ஆம் ஆண்டு ஐக்கிய சோஸலிஸட் கட்சியை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். பின்னர் 1943ஆம் ஆண்டு சாஸலிஸ்ட் கட்சியை இலங்கை கம்யூனிஸட் கடசி என மாற்றிக்கொண்டனர். இக்காலகட்டத்தில் வடக்கிலிருந்து இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று நாடுதிரும்பியிருந்த பொன் கந்தையா, அ.வைத்தியலிங்கம் இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்த ந.சண்முகதாசன், மு.கார்த்திகேசன் போன்றோரும் இன்னும் சிலரும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து முழுநேர கட்சி ஊளியர்களாயினர். என்.சண்முகதாஸன் தொழிற்சங்க இயக்க வேலையை பொறுப்பேற்று செயல்பட்டார்.
இவர்கள் நால்வரும் வடக்குக்கு வந்து தமக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்டுகளை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து இயங்கத்தொடங்கினர். ஏற்கெனவே வடபகுதியில் லங்கா சமசமாஐக் கட்சியினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாக்ஸிய லெனினிஸத்தை ஏற்றுக்கொண்ட மாக்ஸிஸ்ட் லெனினிஸ்டுகள் லங்கா சமசமாஐக் கட்சியின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அதிலிருந்து விலகி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்கள். வடமராட்சி பிரதேசத்தில் பொன் கந்தையாவும், வட்டுக்கோட்டை பிரதேசத்தில் அ.வைத்திலிங்கமும், யாழ்ப்பாண பிரதேசத்தில் மு.கார்த்திகேசனும்,​ கேகே.எஸ் பிரதேசத்தில் சு.வே. சீனிவாசகர், வ.பொன்னம்பலம் போனறோர்​ வேலைசெய்தனர். இதனால் இலஙகை கம்யூனிஸ்ட் கட்சி வேகமாக வளரத்தொடங்கியது. மு.கார்த்திகேசன் அவர்களின் முயற்சியின்பயனாக யாழ்நகரில் எம்.சி.சுப்ரமணியம்,​ கேடானியல், டொமினிக் ஜீவா, ராமசாமி ஐயர், வி.ஏ..கந்தசாமி போன்றோர் வென்றெடுக்கப்பட்டனர். சிறுபான்மை மகாசபயினரான இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களாகவும் பிரதான ஊளியர்களாகவும் இருந்தனர். இதனால் நகரப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு வளரத்தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி சிறுபான்மை தமிழர்களுக்கு பலவழிகளில் உதவிசெய்த்து. அதேபோன்​றே பஸ் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், சலுன் தொழிலாளர்கள், சுருட்டு தொழிலாளர்கள் மத்தியில் போர்குணத்துடன் வேலைசெய்த்து. இத்தொழிலாளர்ளை, தாழ்த்தப்பட்ட மக்களை யார் யார் அடக்குகிறார்களா அவர்களுக்கெதிராகவும், அவர்களது தாக்கதலகைளை தாங்கிக்கொள்ளவும், திருப்பிதாக்குதல்​ தொடுப்பதுமான செயல்பாடுகளின் மூலம்​ செயல்பட்டது.   
1952ஆம் ஆண்டு இலஙகை கம்யூனிஸ்ட் கடசி முதலாவது வட பிரதேச வாலிபர் சம்மேளன மாநாட்டை கே.டானியல், வீ.கந்தசாமி, மேன் முத்தையா, போன்றோர் முன்னின்று நடத்தினர். இம் மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்களான எஸ.ஏ.விக்ரமசிங்க, பீட்டர் கெனமன், கம்யூனிஸ்ட் வாலிபர் சங்க உறுப்பினர்களை உற்சாகப்படுத்தினர. 1947 பாராளுமன்ற தேர்தலில் பொன் கந்தையா பருத்தித்துறை​ தொகுதியில் கம்யூனுஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தலில் அவர் தோல்விடைந்தாலும் நிறைய கம்யூனிஸ்ட் வாலிபர்ளையும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களையும் திரட்டிக் கொண்டார. இதன்மூலம் கட்சிக்கு பலம்கூடியது .1952  பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு சிறியஅளவு வாகச்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதேவேளை கட்சி மேலும் பலமடைந்த்து. வடமராட்சி பகுதியில் இருந்த தாழ்த்தப்பட்ட  தமிழ்மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சிக்குபெரும்செல்வாக்கு வளர்ந்த்து. ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியிலும் கட்சி கிளைகள் உருவாகின.
1953இல் நடைபெற்ற தேசிய ஹர்த்தாலின்போது வடபகுதியிலும் பஸ் தொழிலாளர், சுருட்டுத் தொழிலாளர்கள், சலூன் மந்றும் சலவை தெழிலாளர்கள், கள்இறக்கும் தொழிலாளர்களும் ஆசிரியர்களும், மாணவர்களும் பெருமளவில் பங்குபற்றினர். இந்த ஹர்த்தாலில் வடபகுதியில் இயங்கிவந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும், தமிழரசுக் கட்சியும் இவர்களின் தொழிற்சங்கங்களும், ஆதரவாளர்களும், பெருமளவில் பொதுமக்களும் கலந்துகொண்டு  வடபகுதி மக்களின் ஆதரவை தென்னிலங்கை தொழிலாளவர்க்கத்துக்கு வழங்கினர். இதன்மூலம் அடங்கிக்கிடந்த தமிழ் மக்கள் மத்தியிலான போர்குணம் வளர ஆரம்பித்த்து.. இன்றும் நினைவுகூரப்படும் 1947பொது வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட ஜி.சீ.எஸ்.யூ சங்க உறுப்பினரான அரசாங்க எழுதுவினைஞர் வி.கந்தசாமி யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்தவர்.அவரும் வடக்கில் எழுந்த முற்போக்கு கருத்துக்களால் கவரப்பட்வர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1956இல் நடை பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, காங்கேசன்துறை, பருத்தித்துறை ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது. முறையே மு.கார்த்திகேசன், அ.வைத்திலிங்கம், வி.பொன்னம்பலம், பொன் கநதையா. ஆகியோர் போட்டியிட்டனர், இவற்றில் பொன் கந்தையா பருத்தித்றை தொகுதியில் அதிகப்படிளான வாக்குகளைனப் பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். ஏனைய  மூவரும் தோல்விடைந்தாலும் கணிசமான வாக்குளைப் பெற்றிருந்தனர். தோழர். பொன் கந்தையா எம்.பி.யானதும்  நிலமற்ற விவசாயிகளுக்கு அரச காணிளை பெற்றுக் கொடுத்தும், கல்வி கற்கும் உரிமையற்றிருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பள்ளிக்கூடங்ளை அமைத்துக் கொடுத்தார். 1947களுக்குப் பின் பாராளுமன்றத்திலும், மாநகரபைகளிலும, பட்டினசபைகளிலும், கிராமபைகளிலும் போட்டிபோட்டு கிடைத்த அங்கத்துவங்ளை கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்தை கட்சியின் வளர்ச்சிக்கு பிரதான வழியாக கம்யூனிஸ்ட் கட்சியும், லங்காசமசமாஜக் கட்சிய்யும் கருதி செயல்பட்டன. இம் முயற்சியின் பிரதிபலனாக சு.வே.சீனிவாசகம் கிராமசபை உறுப்பினராகினார், கணபதிப்பிள்ளை காங்கேசன்துறை பட்டினசபை உறுப்பினரானார், சங்கனை பட்டினபயை கைப்பற்றி  எம். முத்தையா தலைவரானார், வைரமுத்து, பசுபதி போன்றோர் அங்கத்தவர்களாகினர். வல்வெட்டித்தறையில் திருப்பதி லைவராக இருந்தார். கரவெட்டி கட்டவேலியில் ஜெயசிங்கம் போன்றோர் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்து பொதுமக்களுக்கு சேவையாற்றினர். இவற்றில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த்து, கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேச் செயலாளராக பதவிவகித்த மு.கார்த்திகேயன் 1954 யாழ் மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்மையாகும். இந்நிகழ்வானது கம்யூனுஸ்ட்டுகள் வடபகுதியில் பலப்பட்டு வருகிறார்கள் என்பதை பறைசாற்றியது. அதேபோல் லங்கா சமசமாஜக் கட்சியின. சார்பில் யாழ் மாநகரசபையில் அவிசுவநாதன், எஸ்.துரைரஜசிங்கமும், உடுப்பிட்டி கிராமசபை தலைவராக ஆர்.ஆர்.தர்மரட்னமும், சுன்னாகம் பட்டினசபை​ தலைவராக பி.நாகலிங்கமும் அங்கத்துவம் பெற்று பொதுமக்களுக்கு சேவைசெய்தனர்.
1957ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமூக குறைபாடுகள் ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தும்படி சிறுபான்மை தமிழர்மகாபை 1958 டிசம்பரில் நடைபெற்ற சிறுபானமை தமிழர் மகாசபையில் கோரிக்கை வைத்து. டிசம்பர் 13க்குள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவமாக தேனீர்கடைகள், உணவகங்கள், கோவில்கள் திறந்துவிடப்படவேண்டும். இல்லையேல் அவைகளுக்கு முன்னால் சத்தியாகிரகம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. இது வடபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..கம்யூனிஸ்ட் கட்சியும், சிறுபான்மை தமிழர் மகாசபையும் அதற்கான தயாரிப்புகளை நகரத்திலும் கிராமங்களிலும் செய்யத் தொடங்கியது. சாதிவெறியர்களும், பிற்போக்குவாதிகளும், கோவில் திறப்பு, கடைகள் திறப்பு நடவடிக்கைளை தடுத்து நிறுத்த திரைமறைவில் பல்வேறு ஆலேசனைகளை மேற்கொண்டாலும் அவர்களால் ஏதும் செய்யமுடியாத நிலைமை.
முதலாவதாக அரசாங்கத்தின் சட்டத்தை அமுல்படுத்தும்படி கேட்டே போராட்டம் நடத்தப்படவுள்ளதும், மேலும் யாழ்நகரப்பகுதிகளில் கூடுதலாக தாழ்த்தப்பட்ட மக்கள் செறிந்து வாழ்வதும், கம்யூனிஸ்ட் கட்சியும் முற்போக்காளர்களும் இதற்கு ஆதரவு கொடுப்பதும் போராட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எனவே டிசம்பர் 13ஆம் திகதி யாழ்நகரின் சுபாஸ் கபே, வை.சி.கு.தேனீர்கடை, கோவிந்தபிள்ளை தேநீர்கடை, போன்ற முக்கிய தேநீர்கடைகள் மற்றும் சிறிய தேனீர் கடைகள் தாழ்த்தப்பட்ட்ட மக்களுக்கு  சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. அதேபோல் நல்லூர் கந்தசாமி கோவில், வண்யார்பண்ணை சிவன் கோவிலும் சமத்துவமாக திறந்துவிடப்பட்டது. அதேவேளை நகரத்தை அண்டிய பிரதேசங்களிலும், கிராமப்பகுதிகளிலும் சாதிவெறியர்களினதும், பிற்போக்காளர்களினதும் ஆதிக்கம் மிகக்கடுதலாக இருந்தபடியால் அங்கிருந்த தேனீர்கடைகள் , உணவகங்கள், கோவில்கள், குளங்கள் எவையுமே 1970வரை  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்துவிடப்படவில்லை.
1950வரை வடபகுதி பிற்போக்கு எழுத்தாளர்கள் சாதிஅமைப்பை பாதுகாத்து எழுதிவந்தார்கள் அதுதான் தமிழ் இலக்கிய சுபாவமாக இருந்த்து. கம்யூனிஸ்ட் கட்சி பலமடையத் தொடங்கியதும் முற்போக்கு எழுத்தாளர்கள் தோன்றத் தொடங்கினர் கே.டானியல்,டொமினிக்ஜீவா, கவிஞர் பசுபதி, இளங்கீரன், நீர்வை பொன்னையன், முருகையன், சில்லையூர் செல்வராசன், அ.ந.கந்தசாமி, பிரேம்ஜி, தெனியான், செ.கணேசலிங்கம், தங்கவடிவேல், ரகுநாதன் போன்றோர் தொழிலாளர், விவசாயிகள், ஏழைஎளிய மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தங்களது டைப்புகளை எழுத்த்தொடங்கினார்கள். பிற்போக்குவாதிகள் இவ்வாக்கங்களை இலக்கியங்கள் என நிராகரித்தாலும், இவைகள்தான் மக்கள் இலக்கியங்கள் என்பதை இவர்கள் நிரூபித்தார்கள்.
அன்று தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழ் மக்கள் அவர்களின் பிற்போக்கு கொள்கைளை எதிர்ப்பதிலும், அக்கட்சிகளின் ஆதரவு பெற்ற முதலாளிகள், நிலஉடமையாளர்களையும் எதிர்த்து வாய்திறக்க முடியாதநிலையில் இருந்தநேரத்தில்தான் லங்கா சமசமாஐக் கட்சியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் வடபகுதியில் உருவாகி, சாதரண ஏழை எளிய தமிழ்மக்கள், தாழ்த்தப்பட்ட தமிழ்மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பிரச்சினைக்கு தோழ்கொடுத்து உதவிவந்த்து. இக்கட்சிகள் நடாத்தும் மேதின ஊர்வலங்கள், கூட்டங்களில் மக்கள் கலந்துகொண்டு வாய்திறந்து  உரத்தகுரலில் சகல பிற்போக்குகளுக்கும் எதிராக கோஷமிட்டு தம்மை புரட்சிவாதிகளாக்கிக் கொண்டார்கள். இவ் இரு கட்சிகளிலும் 1960 களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறி தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் கூடுதல் ஆதரவை தேடிக்கொண்டது. 1963 காலகட்டத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏறப்ட்ட த்த்துவார்த்த போராட்டத்தில் கட்சி இரண்டாக பிளவுபட்டது என.சண்முகதாசன் தலைமையில் புரட்சிவாதிகள் ஒன்றிணைந்து புரட்சிவாத இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தனர். 

No comments:

Post a Comment

Search This Blog